தமிழியல் வளர்ச்சிக்குத் ‘தமிழ் மாருதத்’தின் பங்களிப்பு
தமிழ்வழிக் கல்வி குறித்துத் தமிழக
அரசுக்கு வேண்டுகோளாகப் பத்துத் திட்டங்களை முன் வைக்கிறார். இதுவே தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும்,
தமிழ் இனத்திற்கும் செய்யும் தொண்டாக அமையும் என்பது ஆசிரியரின் நோக்கமாகும்.
“தமிழ்வழிக் கல்வி, தமிழ்வழிக் கல்வி” – தேசிய கவி பாரதியார், “எங்கும் தமிழ், எதிலும் தமிழெல்லாம் தமிழ்” – அறிஞர் அண்ணா முழக்கம்
இவர்களின் கனவு நினைவாகத் “தமிழ்வழிக் கல்வித் திட்டத்”தை உடனடியாகச்
செயல்முறைக்குக் கொண்டுவர வேண்டும்.
அதற்குரிய பத்துத் திட்டங்கள்:
1.
ஒருவர், ஆங்கிலம், இந்தி,
வடமொழி, மலையாளம், தெலுங்கு,
கன்னடம் என எத்தனை மொழிகளையும் படித்துக் கொள்ளலாம். ஆனால் கல்வி மட்டும் தமிழ் வழியாகவே
இருக்க வேண்டும்.
2.
தமிழ் நாட்டில் ‘தமிழ்’ கட்டாயப்
பாடமாக்கப்படவேண்டும்.
3.
தமிழை முதன் மொழியாகவும், விரும்பிய வேறு
ஒன்றை இரண்டாம் மொழியாகவும் கற்கும் நிலை வேண்டும்.
4.
‘தமிழ்வழிக் கல்வி’ என்ற
நிலை இருந்தால், காரியாப்பட்டிக் கறுப்பணனும், கல்வி கற்றுப் பொறியியல் அறிஞராக, மருத்துவ மேதையாக வரமுடியும்,
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிப் பீடத்தில் இருப்போர்,
அந்த மக்களுக்கு உண்மையான நன்மை செய்ய வேண்டுமெனில் இதுவே வழி!
5.
வேண்டுவோர் தமிழ்க் கல்வி கற்கலாம்; ஏனையோர்
ஆங்கில வழிக் கல்வி என்ற இரு நிலை அறவே அகற்றப்பட வேண்டும். ஆங்கில வழியேதான் கற்போம் என்போர்,
பெரும் வசதி படைத்தவர்களாகவே இருப்பர். அவர்கள் இத்தகைய கல்வியை வெளிநாட்டிற்குச்
சென்று பெறலாமே?
6.
‘தமிழ்வழிக் கல்வி’ என்றதும்,
முழுவதுமே தமிழ் இலக்கியம் போலும் என்று தவறாக எண்ணிவிடுகின்றனர். தமிழ்க் கல்வி வேறு தமிழ்வழிக் கல்வி
வேறு என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.
7.
வேறு சிலர், தமிழ்வழிக் கல்வி வந்தால், தமது வேலை போய்விடுமே என்று அஞ்சகின்றனர். பொருளாதாரம், வரலாறு, அறிவியல், புவியியல்,
கணிதம் போன்ற பாடங்களை எந்தத் தமிழாசிரியரும் நடத்தப் போவதில்லை. அந்தந்தத் துறை ஆசிரியர்கள்தாம் நடத்த
முடியும்.
8.
தமிழ்வழிக் கல்வி கற்றவர்க்கே தமிழகத்தில் வேலை வாய்ப்பில் முதலிடம்
என்று அரசு ஆணை பிறப்பித்தால் போதும், உடனடியாகவே மாணவர்கள் இதில் சேர முந்துவர்.
9.
தமிழ்வழிக் கல்வி எனின் நூல்கள் இல்லை என்பர் சிலர். இப்போது நிறைய நூல்கள் வந்து விட்டன. அரசு நினைத்தால் ஆகாதது உண்டோ?
அறிஞர் குழு அமைத்து உடனடியாகச் செயல்படுத்தலாமே?
10.
தமிழில் கலைச்சொல் இல்லையே என்பர் சிலர். இருப்பதையே பயன்படுத்துவோம். இல்லாவிடில் தமிழ் வரி வடிவத்திலேயே
அத்தகைய சொற்களை ஏற்போம். காலம் செல்லச் செல்ல இயல்பாகவே நல்ல கலைச்சொல் வந்துவிடும்.5
மேலும், ‘தமிழ்வழிக்
கல்வி’யை மேல் நிலையிலிருந்து அதாவது ‘மருத்துவம்,
பொறியியல்’ போன்ற உயர்மட்ட வகுப்பிலிருந்து தொடங்க
வேண்டும். அப்போதுதான்
+2பயில இருக்கும் மாணவருக்குத் ‘தமிழ்வழிக் கல்வி’ கற்க விருப்பம் உண்டாகும்.
‘தமிழ்வழிக் கல்வி’க்கு நல்ல தமிழில் பாட நூல்கள் இல்லை என்று கவலைப்படாமல், தொடக்க நிலையில் நல்ல தமிழ்ச் சொல் இல்லாவிடினும், ஆங்கிலச்
சொற்களை அப்படியே தமிழ் வழி வடிவத்தில் எழுதலாம். காலப் போக்கில் நல்ல தம்ழ்ச் சொற்கள்
தாமாகவே உருவாகிவிடும்.
‘தமிழ்வழிக் கல்வி’ கற்ற மாணவர்கட்குத் தமிழகத்து வேலை வாய்ப்பில் முதன்மை தருதல் வேண்டும்.
‘தமிழ்வழிக் கல்வி’ என்றதும் ஆங்கிலம் போன்ற மொழிகளை அறவே நீக்குதல் என்று கருதிவிடலாகாது. தமிழ் வழிக் கல்வியில் சேர்வோர்,
தாம் விரும்பும், ஆங்கிலம், இந்தி, பிரெஞ்சு, தெலுங்கு,
மலையாளம், கன்னடம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைத்
தம் விருப்ப மொழியாகக் கற்க வகை செய்தல் வேண்டும்‘6
இவ்வாறு தமிழ்வழிக் கல்வித்
திட்டம் குறித்து ஆசிரியர் பல்வேறு இதழ்களில் தொடர்ந்து வலியுறுத்தி வருவதைக் காணமுடிகிறது.
பெற்ற விருதுகளும் பரிசுகளும்
இதழாசிரியர்
சாம்பசிவனார் பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். இவை தமிழுக்காக அவர் ஆற்றிய பணிகளுக்காக் கிடைத்தவையாகும். அவற்றுள் ஒருசில வருமாறு:
1.
1970இல் மதுரைத்
திருவள்ளுவர் கழக ஆண்டு விழாவில், சிவனார் செய்து வரும் தமிழ்த்
தொண்டுக்காகத் தமிழவேள் பி.டி. இராசனார் பொன்னாடை போர்த்திப் பாராட்டியமை.
2.
1954இல் நடைபெற்ற கரந்தைத் தமிழ்ச் சங்க வெள்ளி விழாவில்
தமிழவேள் உமாமகேசுவரனார் நூலை அரிதின் முயன்று உருவாக்கி வெளியிட்டமைக்காகச்
‘செந்தமிழ்ச் செல்வர்‘ எனும் பட்டம் வழங்கிப் பாராட்டப் பெற்றமை. பட்டம் வழங்கியவர் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.
விசுவநாதம்.
3.
தவத்திரு குன்றக்குடி அடிகளார் தமது குருபூசை விழாவில்
‘தமிழாகரர்‘ எனும் பட்டமும் பொற்பதக்கமும்; பொன்னாடையும் நல்கிப் பாராட்டு (1985) அளித்தமை.
4.
சென்னையில் டாக்டர் திருமதி லலிதா
காமேசுவரனும் மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்திய ‘நாவலர்
சோமசுந்தர பாரதியாரின் தமிழ் இலக்கியப் பணி’‘ (சிவனாரின் முனைவர் பட்ட ஆய்வேடு)
எனும் நூல் வெளியீட்டு விழாவினை நடத்தல்.
சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம் தலைமை தாங்கி, நூலை வெளியிட்டுச் சென்னை நல்வாழ்வு மன்றச் சார்பில்
‘அருந்தமிழ் மாமணி‘ எனும் பட்டம் வழங்கல்; விழாவில் சிவனாருக்குப் பொன்னாடை
போர்த்திப் பாராட்டியவர் மாண்புமிகு கல்வியமைச்சர் இரா. நெடுஞ்செழியன்
(21-06-1986).
5.
தமிழ்த் தொண்டுக்காகச் சென்னை
வி.ஜி.பி. நிறுவனத்தாரின் பாராட்டு; தங்கக் கடற்கரை
விழா. தமலைமை – சிலம்புச் செல்வர் ம.பொ.
சிவஞானம் பொற்கிழி ரூ.1000 பரிசு, பொன்னாடை (1987).
6.
சென்னை உரத்த சிந்தனையில் பாராட்டு; விக்ரமன் பரிசு ரூ.1000 (02.05.1998).
7.
தமிழ்த் தொண்டிற்காக வட அமெரிக்கத்
தமிழ்ச் சங்கம் மிக உயர்ந்த மாட்சிமைப் பரிசினை வழங்கல். 250 அமெரிக்கன் டாலர், கேடயம் ஆகியவற்றை முனைவர் தமிழண்ணல் தலைமையில்
வழங்கல் (1998).
8.
மதுரைத் திருவள்ளுவர் கழக ஆண்டு
விழாவின் போது (27-11-1998) பி.டி.ஆர். கமலைத் தியாகராசன் தலைமையில் ‘தமிழ்ச்
செம்மல்‘ பட்டம்.
9.
காஞ்சி காமகோடி பீடம் ஜெயேந்திர
சுவாமிகள், ஸ்வர்ண ஜயந்தி விழா, சென்னை சைவ சித்தாந்த அறிஞர் 50 பேரில் ஒருவராகத்
தேர்ந்தெடுக்கப்பட்டுப் பொன்னாடையும் ரூ.10,000 பணமுடிப்பும் நல்கப்
பெற்றமை (18.01.2004).
10. திருக்குறள் தொண்டிற்காகத் திருவாவடுதுறை ஆதீனம் குருமகா சந்நிதானம்
26-02-2005இல் ‘திருக்குறள் செம்மல்‘ பட்டமும் பொன்னாடையும் ரூ.3000 பணமுடிப்பும்
வழங்கல், மேலும், விழாவில் ‘ஆள்வினையும் ஊழ்வினையும்’‘ எனும் தலைப்பில்
சொற்பொழிவு ஆற்றியமை.
11. பழ. நெடுமாறனும் அவரின் தம்பியரும் சேர்ந்து, சிவனார் எழுதிய ‘அறநெறியண்ணல் கி.ப. வாழ்க்கை வரலாறு’‘ நூலைச் சிறப்பாக
வெளியிட்டு (2005) அவருக்குப் பொன்னாடை போர்த்திப் பரிசுகளும் வழங்கினர்.
12. சர்வதேசத் தமிழ்ப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பண்பாட்டுத் தூதரகம், அமெரிக்கா மதுரையில் 08.12.2007 அன்று நிகழ்த்திய பல்துறைச் சாதனையாளர்
பட்டமளிப்பு விழாவில் ‘மதிப்புறு முனைவர்‘ (D.Litt) பட்டம் நல்கல்.
13. ‘இலக்கிய இணைர் பேரா. இரா. மோகன் – நிர்மலா மோகன் மணிவிழா மலர்‘ வௌயீட்டு விழா
மதுரையில் 11.09.2010 அன்று நிகழ்ந்தது.
விழாவில் முனைவர் ச. சாம்பசிவனாருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’‘ம்
ரூ.5000 பணமுடிப்பும் வழங்கப்பட்டது.
14. ‘சிவனாரின் முத்து விழா மலர்‘ வெளியீட்டு விழா மதுரையில் 16-01-2011 ஞாயிறன்று
நிகழ்ந்தது. விழாவில், ‘சிவனாரின் முத்து விழா மலர்‘ மற்றும் ‘சிந்தனைச்
செழுந்தேன்‘ ஆகிய இரு நூல்கள் வெளியிடப்பட்டன.
மதுரைத் திருவள்ளுவர் கழக ஆண்டு விழாவின்
போது (27-11-1998) பி.டி.ஆர். கமலைத் தியாகராசன் தலைமையில் ‘தமிழ்ச் செம்மல்‘
பட்டம் பெற்ற சிவனாருக்கு தெ. முருகசாமி பாடிய வாழ்த்துப் பாமாலை:
“மதுரைத்
தமிழ்ச் சங்க
மாவயலின்
தமிழ்நாத்து!
மதுரைப்
பல்கலையாம்
மாக்கடலின்
தமிழ்முத்து!
மாதமாய்
வீசுகின்ற
மாருதமாம்
தமிழ்த்தென்றல்!
ஏதமே
அறியாத
ஏற்றமிகு சாம்பசிவர்!
நாவலராம்
ச.சோ.
பாரதியின்
நற்றொண்டர்!
காவலராம்
கன்னித்
தமிழ்த்தெய்வப்
பூசாதி!
பாவலராய்ப்
பைந்தமிழ்ப்
பாட்டெழுதும்
பாட்டாளி!
நாவலராய்ப்
பேசும்
தமிழ்ச்சான்றோர் கூட்டாளி!
அத்தகு
சிறந்தோரின்
அன்னைத்தமிழ்த் தொண்டிற்காய்
மொத்தபுகழ் மீனாட்சித்
திருக்கோயில் வளாகத்து
வள்ளுவர்
கழகத்தில்
வளமான
பாராட்டை
உள்ளி
எடுக்கின்றார்
உயிர்விழா வாழ்கவாழ்க!””
வெண்பா
தண்டமிழ்த்
தொண்டால் தமிழ்த்தழும் பேறிய
தண்டமிழ்ச்
சாம்ப சிவ
சான்றோர்
மனமாரப் பாராட்டச்
சாருதே இன்னும் சிறப்பு!”?
என்று ச. சாம்பசிவனாருக்குப் பாராட்டு விழா வாழ்த்துப்
பாடியுள்ளார் தெ. முருகசாமி.
தமிழக அரசின் பாராட்டு
சிவனாரின் தமிழ்த் தொண்டினைத் தமிழக அரசும் பாராட்டத் தவறவில்லை.
1.
முனைவர் ச. சாம்பசிவனாரின் மகளுக்கு டாக்டர் ல்லிதா காமேசுவரனின்
முயற்சியால் மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றமை. இடம் அளித்த பெருமை மாண்புமிகு புரட்சித்
தலைவரைச் சாரும்.
2.
மாண்புமிகு பேராசிரியர் க. அன்பழகன்
05-03-1989 இல் பல்கலைக்கழக ஆசிரியர்களில் நல்லாசிரியர் விருது வழங்கியமை.
3.
மாண்புமிகு செ. அரங்கநாயகம் 1993இல், தமிழ் வளர்ச்சி இயக்க்கத்தின் சார்பில்
‘வளர்தமிழ் ஆர்வலர்’ பட்டமும் பரிசும் நல்கியமை.
சிவனாரின் கல்வித்துறைப் பாட நூல்கள்
1.
1963இல் சென்னை மாநிலம் முழுமைக்கும் சிவனாரின்
‘பயன்பட வாழ்ந்த பெரியார்’ என்னும் நூல் பள்ளியிறுதி
பயிலும் மாணாக்கர்களுக்குத் துணைப் பாடமாக அமைதல்.
2.
தமிழக அரசால் பதின்ம (அயவசஉ) பயிலும்
மாணவர்களுக்குச் சிவனாரின் ‘தமிழவேள் உமாமகேசுவரனார்’
என்னும் நூல் பாட நூலாகப் பரிந்துரைக்கப்பெறல்.
3.
மதுரை காமராசர் பல்கலைக்கழகப் புகமுக வகுப்புக்குச் சிவனாரின் ‘தமிழவேள்
உமாமகேசுவரனார்’ – பாடநூல் ஆதல்.
4.
1984 -85ஆம் ஆண்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சிப் பல்கலைக்கழகங்களில்
இளங்கலைப் பாடமாகச் சிவனாரின் ‘மேகலை நாடகம்’ பரிந்துரைக்கப்பெறல்.
5.
1987இல் கேரளா – கள்ளிக்கோட்டைப்
பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் பாடமாகச் சிவனாரின் ‘புகழின் காயம்’
என்னும் நூல் பரிந்துரைக்கப்பெறல்.
6.
1994 முதல் 1998 வரை மேற்கண்ட
பல்கலைக்கழகங்களில் ‘பஞ்சுபடா நூல்’ என்னும்
நூல் பாடமாக வைக்கப் பெறல்.
கல்வி ஆசிரியர், இதழாசிரியர்,
அய்வு நெறியாளர், தமிழ்த் தொண்டர் எனத் தம் பணிகளைத்
திறம்படச் செய்துவரும் சிவனார் பன்முகப் பரிமாணங்கள் கொண்ட ஓர் ஆளுமையாளர்.
கவிதைகள்
கவிஞன் தனக்குள் இருக்கு மன உணர்வுகளைக் கவிதைகளில் வெளிப்படுத்துகிறான். அக்கவிதைகள் மனத்தில் நிலைத்து நிற்க,
“நம்தமிழில் கவிதைகள்
புனைய வேண்டும்!
நாட்டாரும் மதிக்கும்படி
செய்தல் வேண்டும்!
நம்தமிழ்நா டுலகத்தில்
சிறந்து நிற்க
நம்மாலே அனமட்டும்
செய்ய வேண்டும்!
நம்மவரைக் கண்டுபிறர்
போற்ற வேண்டும்!
நம்முன்னோர் வீரமதைக்
கொள்ள வேண்டும்!
நம்மாலே பிறர்க்குதவி
வேண்டும் என்றால்
நாமாக முந்திநின்று முடித்தல் வேண்டும்!”1
பிறநாட்டினரும் மதிக்கத்தக்க வகையில் தாய்மொழியில் கவிதை
எழுத வேண்டும்; உலகத்திலேயே தலைசிறந்த நாடகத் தமிழ்நாடு திகழ்வதற்காக வகை செய்ய
வேண்டும் என்று சாம்பசிவனார் கூறகிறார்.
அந்த வகையில் தமிழ், தமிழ்நாடு,
தமிழர் என்ற அடிப்படையில் ‘தமிழ் மாருத’த்தில் வெளியான மரபுக் கவிதைகள், புதுக் கவிதைகள் இவ்வியலில்
ஆய்வ செய்யப்படுகின்றன.
மரபுக் கவிதைகள்
‘தமிழ் மாருதம்’ இதழில் வெளிவந்த மரபுக் கவிதைகளின் விளக்கம்,
‘தமிழ் மாருதம்’ இதழில் மரபுக் கவிதை என்றவாறு
பகுக்கப்பட்டள்ளது.
மரபுக் கவிதை – விளக்கம்
தொன்றுதொட்டு வரும் தன்மையுடையது என்பதை ‘மரபு’
என்னும் சொல் உணர்த்தி நிற்கின்றது என்பர். தமிழ் யாப்பிலக்கணத்துக்கு உட்படாத
வசன கவிதை, தொடக்க காலத்தில் ‘புதுக் கவிதை’
என்று அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் அதுவே
‘கவிதை’ என்றாகிப்போனது. காவியமாக / செய்யுளாக இருந்த தமிழ் கிறித்தவர் வருகையினாலே
உரைநடை இலக்கியமாக மாறியது.
பாடு பொருளும் உத்திகளும் புதியனவாயினும் மரபு இலக்கணத்தின்படி படைக்கப்படுதலின்
இவை ‘மரபுக் கவிதை’ எனப்படுகின்றன. சங்க இலக்கியம், காப்பியங்கள், நீதி நூல்கள், பக்தி
இலக்கியம், சிற்றிலக்கியம், தனிப்பாடல்கள்
என யாவும் மரபுக் கவிதைகளால் ஆனவையே ஆகும்.
“தொன்று நிகழ்ந்த்து
அனைத்தும் உணர்த்திடு
சூழ்கலை வாணர்களும்
– இவள்
என்று பிறந்தவள் என்றுண
ராத
இயல்பின ளாமெங்கள் தாய்”2
எனப் பாரதியார் படும் பாடல். மரபுக் கவிதையின் காலத் தொன்மைக்கும்
பொருந்தக் கூடியதாக விளங்குகிறது. யாப்பிலக்கணத்துக்கு உட்பட்ட கவிதை ‘மரபுக் கவிதை’
ஆயிற்று, சீர், தளை,
அடி, தொடை என்னும் கட்டுப்பாடுகளை உடையது மரபுக்
கவிதை. பாக்களையடுத்துப்
பாவினங்களம், அவற்றை யடுத்துக் கும்மி, சிந்து போன்றனவும் தோன்றின.
இவ்வாறுதான் பாடப்பட வேண்டும் என்னும் வரையறை இருப்பதால் சிதறாத
வடிவமாகப் பாதுகாக்கப் பெற்றுக் காலந்தோறும் இம்முறை பின்பற்றப்பட்டு வருகின்றது.
‘தமிழ் மாருதம்’ இதழில் சாம்பசிவனார் எழுதி வெளிவந்த தமிழ்,
தமிழ்நாடு, தமிழ் இனம் எனத் தமிழ்மொழிப் பற்றுமிக்க
கவிதைகள், வாழ்த்துப் பாக்கள் பெரும்பாலும் வெண்பா இலக்கணத்தில்
புனையப் பெறுகின்றன.
மொழியியல் அறிஞரும், பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழியல்
துறைத் தலைவருமான கி. கருணாகரன், தமிழ்ப்
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக அமர்த்தப் பெற்றுள்ள செய்தி அறிந்து அவருக்கு வாழ்த்துப்
பா ஒன்றைப் பாடினார் சிவனார். அப் பா வருமாறு:
“கருணா கரனென்னும்
கன்னித் தமிழர்
பெருமைத் துணைவேந்தர்
பேர்துலங்க வந்தார்!
தஞ்சைக் கழகம் தரணிப்
புகழ்பெற
நெஞ்சாரப் போற்றுவம் நீடு!”3
தமிழண்ணல் ‘குறள் பீட’த்தின் துணைத் தலைவராக அமர்த்தப் பெற்ற செய்தியறிந்து அவர்தம் தொண்டு சிறக்கச்
சிவனார் வாழ்த்திய வெண்பா இது:
“தமிழண்ணல் ஆற்றிவரும்
தண்டமிழ்த் தொண்டு
இமிழ்கடல்சூழ் இப்புவியில்
என்றும் நிலைத்திருக்கும்
நல்ல தமிழறிஞர் நாடுபோற்றும் நற்கலைஞர்
உள்ளுவம் என்றும் உவந்து”4
தமிழறிஞர், நற்கலைஞர்
என நாடு போற்றும் தமிழண்ணலின் தமிழ்த் தொண்டு இவ்வுலகில் என்றும் நிலைத்திருக்க வேண்டும்
என்று இதில் வாழ்த்துக் கூறப்பட்டுள்ளது.
அகவை அறுபத்து ஆறில் அடியெடுத்து
வைக்கும் இடிமுரசாருக்குச் சிவனார் பாடிய பிறந்தநாள் வாழ்த்து வெண்பா:
“ஆண்டு அறுபத்து ஆறில் அடிவைக்கும்
காண்டகு நற்கவிஞர் கன்னித் தமிழ்க்கலைஞர்
இன்னும்பல் லாண்டு இனிதே முரசியம்ப
என்றும் சிறக்க இனிது!”6
எழுபத்தாறாவது ஆண்டில் அடியெடுத்து
வைக்கும் கலைஞரைக் ‘காண்டகு கலைஞர் வாழ்க! கணினியைக் கொணர்க!’ என்று சிவனார் பின்வருமாறு வாழ்த்துகின்றார்
:
“தெள்ளுற்ற தீந்தமிழில் நேர்ந்தநற் கீர்த்திகொண்டு
வள்ளுவர் பேர்துலங்க வான்புகழ்க்
கோட்டமிங்குக்
கண்டிட்டார் நம்கலைஞர் காலமெல்லாம்
வாழ்ந்திடுக!
என்றிசிப்போம் எக்காளம் இட்டு”
“அண்ணாவுக் கோர்தம்பி ஆற்றல்சேர் நல்நம்பி!
கண்ணான செந்தமிழைக் காப்பதற்கே
தோன்றியவர்!
சொன்னாலும் நாமணர்க்கும் கேட்டாலும்
காதினிக்கும்
எந்நாளும் வாழ்கவென ஏத்து!”7
எழுபத்து இரண்டாம் அகவை காணும் மா. செங்குட்டுவனார் வாழ்க!
என வாழ்த்துக் கூறும் சிவனாரின் வாழ்த்துப்பா :
“செங்குட் டுவனொரு
செந்தமிழ்க் காப்பாளர்
இங்கண் பலதொண்டு ஈடில்
புகழ்சாற்றும்!
தெய்வத் திருக்குறள்போல்
தித்திக்கும் நல்வாழ்க்கை
மெய்யாய்ப் பெறுக மகிழ்ந்து”9
‘தொல்காப்பியம்’ முதலான
பழந்தமிழ் இலக்கண நூல்களில் பழுத்த புலமை படைத்த ஆ. சிவலிங்கனாருக்கு,
அண்ணாமலைச் செட்டியார் அறக்கட்டளைப் பரிசு வழங்கப் பெறுவது குறித்துச்
சிவனார் பாடிய வாழ்த்துப் பாடல் வருமாறு :
“மயிலம் சிவலிங்கம் மாண்பார் புலவர்
அயில்வேல் முருகன் அடியினைப் போற்றும்
பெருமை உடையவர் பெற்றி சொலற்கரிது!
என்றும் சிறக்க இனிது!”11
வெளிநாட்டுத் தமிழர்களுக்குச்
சிறப்பிடம் தருவது ‘தமிழ் மாருதம்’ இதழின்
தனிச்சிறப்பு அவ்வகையில், இல்லினாய்சில் உள்ள, ‘உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை’யின் இயக்குநர்,
‘தமிழ் மாருதத்’தின் வாழ்நாள் உறுப்பினர் அழ.
இராம்மோகன் – அவர்தம் துணைவியர் (திருமதி) மீனாட்சி இராம்மோகன் ஆகியோரின் ‘மணிவிழா’ வாழ்த்துப்பா இதழில் வெளிவந்துள்ளது.
ஆசிரிய விருத்தம்
“தமிழனுக்குச் சூடில்லை சொரனை யில்லை!
தமிழன்தான்
என்றதொரு நினைவும் இல்லை!
தமிழனுக்குத் தன்மான உணர்வும் இல்லை!
தக்கபடி
செய்வதற்குத் துணிவும் இல்லை!
தமிழனிவன் தன்நாட்டில் வாழ்வ தற்குத்
தன்னினமே
வகையேதும் செய்ய வில்லை!
தமிழன்தன் சாண்வயிறு கழுவு தற்குத்
தன்நாடு விட்டேகிச் சென்றா னன்றோ! (1)
என்று தாய்நாட்டை விட்டு வெளிநாடு சென்ற தமிழனைச் சாடுகிறார்
ஆசிரியர்.
‘குறள்பீட விருது’ பெற்ற அ.ச.
ஞானசம்பந்தனை வாழ்த்திப் பாடப்பெற்ற வெண்பா:
“வள்ளுவர் காட்டும்
வழியிலே வாழ்கின்ற
தெள்ளுதமிழ்ப் பேர்ரறிஞர்
தேர்ந்த கலைஞராம்
ஞாலம் சிறக்கவே ஞானசம்
பந்தனார்
காலமெலாம்
வாழ்க கனிந்து”26
இத்தகு சிறப்புக்கு உரிமையுடையோர் ‘மூதறிஞர்’,
‘முத்தமிழ்க் காவலர்’ கி.ஆ.பெ. விசுவநாதம் ஒருவரே. தம் 96ஆம் வயதில்
உயிர் நீத்த அவருக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் சிவனார் பாடிய இரங்கற்பா :
“முத்தமிழன் காவலரே!
முத்தமிழ்ச் செல்வரே! நீர்
இத்தரைவிட் டேகினீர்
என்றிட்டார்! – அத்தாவே!
விண்ணொடும் தீந்தமிழை
வேதம்போல் பாடிடவே
நண்ணினீர் என்றிடுவேன் நன்று!”28
மொழி, இனப்பற்றுடைய கலைஞர், தமிழின்
தொன்மையைப் பின்வரும் வரிகளில் விளக்குகிறார்.
“பகைவர்க்குத் தாழாமல்
படைகண்டு வீழாமல்
பல்லூழி
வாழ்கின்ற தமிழ்”29
தமிழ்வழிக் கல்வியைக் கொணரக் கவிதை மூலம் தமிழக முதல்வர் கலைஞருக்கு அன்பான
வேண்டுகோள் விடுக்கிறார் சிவனார்.
“தமிழ்வழியே கல்விதனைக்
கொணர வேண்டும்!
தமிழர்களே விழிப்புணர்வு
கொள்ள வேண்டும்!
தமிழறியாத் தமிழனிங்கு
நீங்க வேண்டும்!
தமிழ்ப்புலவர்
தலைநிமிர்ந்து வாழ வேண்டும்!
தமிழ்நாடு உலகப்புகழ்
கொள்ள வேண்டும்!
தமிழ்ப்பகைவர்
இல்லாமற் போக வேண்டும்!
தமிழ்மொழியும் தில்லிமொழி
ஆக வேண்டும்!
தமிழ்க்கலைஙர கனவுநனவாக வேண்டும்!” (1)
“அப்பாவித் தமிழர்கள்
மடிகின் றார்கள்!
அதைக்கேட்கத்
தமிழகத்தில் நாதி இல்லை!
ஒப்பாரி இங்கேயும் கேட்கு
தையோ?
ஒண்டமிழர் வாழ்ந்தவிதம்
என்னா யிற்று?
இப்பாரை ஆள்வதற்கே கலைஞர்
வந்தார்!
இன்றமிழர் துயர்துடைக்க
எழுந்து நிற்பார்!
தப்பாமல் தில்லியிடம்
குரல் எழுப்பித்
தக்கபடி செய்வதுதான் கடமை யாகும்!”30 (2)
தமிழ்வழிக் கல்வி கொணர, தமிழ் தழைத்தோங்கி வளரத் தமிழ்ப்
பொங்கல் நாளில் உறுதி எடுக்க வேண்டும் என்று இதழாசிரியர் பின்வருமாறு அழைப்பு விடுக்கிறார்.
“தமிழ்மூலக் கல்விதனைக்
கொணர வேண்டும்!
தன்மான இனமாக
வாழ வேண்டும்!
‘தமிழ்தானே’
எனச்சொல்வார் ஒழிய வேண்டும்!
தமிழுக்குப் பகைவரெவர்
காண வேண்டும்!
தமிழ்வாழ்வே தம்வாழ்வாய்க்
கருத வேண்டும்!
தக்கபடி தொண்டுசெய
முனைய வேண்டும்!
தமிழ்ஓங்க வழிவகைகள்
செய்ய வெண்டும்!
தமிழ்ப்பொங்கல் நாளுறுதி எடுக்க வேண்டும்!”43
புதுக்கவிதை – விளக்கம்
மரபு இல்லாமைதான் புதுக் கவிதைக்கான இலக்கணம் ஆகிறது. புதுக் கவிதை வாழ்விற்கும் வளர்ச்சிக்கும்
தூண்டுகோலாய் அமைந்த்து. சீர், தளை, அடி, தொடை என்னும் கட்டுப்பாடுகளை உடைத்த்து புதுக்கவிதை. எளிய சொற்கள், எளிய நடை, எளிதில்
பொது மக்களும் புரிந்து கொள்ளக் கூடிய சந்தம் இவற்றைக் குறிக்கோளாக்க் கொண்டதே புதுக்
கவிதை.
“புதுக்கவிதை
என்பது
சொற்கள்
கொண்டாடும்
சுதந்திர
தின விழா”
எனவும்,
“புதுக்கவிதை எனும்
போர்வாள்
இலக்கண உறையிலிருந்து
கவனமாகவே
கழற்றப்பட்டிருக்கிறது”46
எனவும் குறிப்பிடுவார் கவிஞர் வைரமுத்து. ஆங்கிலத்தில் ‘Modern Poetry’ எனப்படும் புதுக் கவிதையை யாப்பற்ற கவிதை,
உரைநடைக் கவிதை, உரைப்பா என்றும் கூறுவர். யாப்பு, எதுகை,
மோனை, தனிமொழி என எந்த இலக்கணமும் இல்லாத்தே புதுக்
கவிதை என்கிறார் கவிஞர் மு.மேத்தா. அவர்,
“இலக்கணச் செங்கோல்
யாப்பு சிம்மாசனம்
எதுகைப் பல்லக்கு
மோனைத் தேர்கள்
தனிமொழிச் சேனை
பண்டித பவனி
இவை எதுவுமில்லாத
கருத்துக்கள் தம்மைத்
தாமே
ஆளக் கற்றுக் கொண்ட
புதிய மக்களாட்சி முறையே
புதுக்கவிதை”47
என்று புதுக்கவிதைக்குப் புத்திலக்கணம் வகுக்கிறார்.
தமிழ்நாட்டில் தடி எடுத்தவர்கள் எல்லாரும் தண்டல் காரர்கள்! தான் என்று நகைச்சுவை த்தும்ப உரைக்கிறார் சா.சி.
மணி.
“தமிழ் மொழிக்கெனத்
தலைவன் இல்லாநாடு;
தமிழ் நாட்டுக்கெனத் தலைவன் இல்லாநாடு;
தமிழ் இனத்துக்கென தலைவன் இல்லாநாடு;
இங்கே ‘தமி’ எடுத்தவர்கள் எல்லாருமே
‘தண்டல்கார்ர்கள்!”53
வேற்று மொழிகளுக்கள் எதிர்ப்பு வந்தால் நூற்றுக் கணக்கானோர் உயிரை விடுவர். ஆனால், தமிழன்
தன்னுயிரை மட்டும் மாய்த்துக் கொண்டு பிறர் வாழட்டும் என்று நினைப்பான இது தமிழனின்
உயரிய பண்பு என்று சிவனார் கூறகிறார்.
இந்தி எதிர்ப்பின் போது நூற்றுக்கணக்கானோர் மாண்டனர் என்பது தமிழக வரலாறு. அப்போதுங்கூடத் தம்க்கு எதிரியானவர்கட்கு
எவ்வித்த் துன்பமும் தாராமல், ‘தமிழ் வாழ்க! இந்தி ஒழிக!’ என்று சொல்லிக் கொண்டே, மண்ணெண்ணெய் ஊற்றித் தம்மைத் தாமே மாய்த்துக் கொண்டனர்! தமிழனின் பண்பு இது!60
நாமெல்லாம் இந்திர்களாக இருந்தும் அப்பாவித் தமிழன் சாகும் போது வாய்மூடிக்
கொண்டிருக்கிறோம் என்று சா.சி. மணி பின்வருமாறு
உள்ளம் குமுறுகிறார்.
“அப்பாவித் தமிழர்கள்
நாள்தோறும்
செத்துக் கொண்டிருக்கிறார்கள்!
கேட்க
நாதியில்லை!
ஆம்!
நாமெல்லாம்
இந்தியர்கள்!”63
பிற நாட்டினரும் மதிக்கத்தக்க வகையில் தாய்மொழியில் கவிதை எழுதப்பட வேண்டும்; உலத்திலேயே தலைசிறந்த நாடகத் தமிழ்நாடு திகழ்வதற்கான வகை செய்ய வேண்டும் என்று
சாம்பசிவனார் வழைகின்றார்.
யாப்பிலக்கணத்துக்கு உட்பட்ட கவிதை ‘மரபுக் கவிதை’
ஆயிற்று. சீர், தளை, அடி, தொடை என்னும் கட்டுப்பாடுகளை உடையது மரபுக் கவிதை, பாக்களையடுத்துப்
பாவினங்களும், அவற்றையடுத்துக் கும்மி, சிந்து போன்றனவும் தோன்றின.
இவ்வாறுதான் பாடப்பட வேண்டும் என்னும் வரையறை இருப்பதால் சிதறாத
வடிவமாகப் பாதுகாக்கப் பெற்றுக் காலந்தோறும் இம்முறை பின்பற்றப்பட்டு வருகின்றது.
சாம்பசிவனார் எழுதிய கவிதைகள் தமிழ், தமிட்நாடு,
தமிழ் இனம் எனத் தம்ழ்மொழப் பற்று மிக்க கவிதைகள், வாழத்துப் பாக்கள் பெரும்பாலும் வெண்பா இலக்கணத்தில் இடம் பெறுகின்றன.
இல்லினாய்சில் உள்ள ‘உலகத் தமிழ் மொழி
அறக்கட்டளை’யின் இயக்குநர், ‘தமிழ் மாருதத்’தின் வாழ்நாள் உறுப்பினர் அழ. இராம்மோகன் அவர்தம் துணைவபியர்
(திருமதி) மீனாட்சி இராம்மோகன் ஆகியோரின்
‘மணிவிழா’ வாழ்த்துப்பா இதழில் வெளிவந்துள்ளது.
ஆசிரிய விருத்தம்
“தமிழனுக்குச் சூடில்லை சொரணை யில்லை!
தமிழன்தான் என்றதொரு நினைவும் இல்லை!
தமிழனுக்குத் தன்மான உணர்வும் இல்லை!
தக்கபடி செய்வதற்குத் துணிவும் இல்லை!
தமிழனிவன் தன் நாட்டில் வாழ்வதற்குத்
தன்னினமே வகையேதும் செய்ய வில்லை!
தமிழன்தன் சாண்வயிறு கழுவு தற்குத்
தன்நாடு விட்டேகிச் சென்றா னன்றோ! (1)”
என்று தாய்நாட்டை விட்டு வெளிநாடு சென்ற தமிழனைச் சாடுகிறார்
ஆசிரியர்.
“பல்வேறு நாடுகளில் வாழ்வார் பலரே!
பாரெங்கும் இன்சுவடு காண்டல் கூடும்!
பல்வேறு மொழிபேசும் மக்க ளாகப்
பண்பினையும் மறந்திட்ட நிலையும் உண்டு!
பல்வேறு நிலைகளிலும் இருந்திட்டாலும்
பார்புகழ வாழ்வோரும் சிலபேர் உண்டு!
பல்வேறு வழியெல்லாம் தமிழைப் போற்றும்
பண்பான அழகப்பர் ஒருவர் உண்டு!” (2)
“சிதறுண்ட தமிழர்களைச் சேர்க்க வேண்டும்!
சிந்தைமிகு இனமாகத் திகழ வேண்டும்!
பதர்போன்ற வாழ்க்கைதனை விட்டொழித்துப்
பாருக்கு வழிகாட்ட முனைய வேண்டும்!
கதம்காத்துக் கற்றடங்க வேண்டும் என்ற
கவின்மிக்க குறள்வழியே நிற்க வேண்டும்!
சதம்பலவும் கடந்தாலும் இந்த எண்ணம்
சான்றோராம் அழகப்பர் ஆழ்ந்து சொன்னார்!” (3)
பல்வேறு நாடுகளில் வாழும்
தமிழர் பலராவர். அவர்கள் தமிழ்ப் பண்பினை
மறந்திட்ட நிலை உண்டு. ஆனால் வெளிநாட்டிற்குச் சென்ற பின்னும் தன் நிலையிலிருந்து மாறாது,
சிதறுண்ட தமிழர்களைச் சேர்க்க வேண்டும் என்ற அரும்பாடுபடுபவர் அழ.
இராம்மோகன் ஆவார்.
“மீனாட்சி மணமுடித்த சிறப்பி னாலே
மேலான பணிகள்பல செய்கின் றாரே!
தானாட்சி மேற்கொள்ளத் தடைக ளின்றித்
தக்கதிருக் குறள்நூலை அளித்திட்டாரே!
கோனாட்சிக் காலத்தில் எவரும் எண்ணார்
குவலயமே போற்றுதிரு நூல்தந் தாரே!
மீனாட்சி பேர்ருளால் பல்லாண் டுகள்தாம்
மேன்மைகள் பலவுமெய்தி விளங்கு வாரே!” (4)
வெண்பா
“மீனாட்சி நற்றுணைவர் மேன்மை அழகப்பர்
காணும் மணிவிழா! கன்னித் தமிழ்விழா!
நற்றமிழ் ஓங்கிடவே நாளும்யாம் ஏத்திடுவோம்!
கற்கண்டாய் வாழ்க கனிந்து!” (24)
அழ. இராம்மோகன்
தன் துணைவியார் மீனாட்சியுடன் நீடித்து வாழுமாறு மணிவிழா வாழ்த்துப் பாடுகிறார் ஆசிரியர்.
‘குறள்பீட விருது’ பெற்ற அ.ச.
ஞானசம்பந்தனை வாழ்த்திப் பாடப்பெற்ற வெண்பா :
“வள்ளுவர் காட்டும் வழியிலே வாழ்கின்ற
தெள்ளுதமிழ்ப் பேரரறிஞர் தேர்ந்த கலைஞராம்
ஞாலம் சிறக்கவே ஞானசம் பந்தனார்
காலமெலாம் வாழ்க கனிந்து” (26)
வள்ளுவர் வழிநின்று வாழ்வு நடத்தும் தமிழ்ப்
பேரரறிஞர் ஞானசம்பந்தனார் இவ்வுலகில் நீடு வாழ வே
இத்தகு சிறப்புக்கு உரிமையுடையோர் ‘மூதறிஞர்’,
‘முத்தமிழ்க் காவலர்’ கி.ஆ.பெ. விசுவநாதம் ஒருவரே. தம் 96ஆம் வயதில்
உயிர் நீத்த அவருக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் சிவனார் பாடிய இரங்கற்பா:
“முத்தமிழின் காவலரே! முத்தமிழ்ச்
செல்வரே! நீர்
இத்தரைவிட் டேகினீர் என்றிட்டார்! – அத்தாவே!
விண்ணொடும் தீந்தமிழை வேதம்போல் பாடிடவே
நண்ணினீர் என்றிடுவேன் நன்று!”
தமிழ்வழிக்
கல்வியைக் கொணரக் கவிதை மூலம் தமிழக முதல்வர் கலைஞருக்கு அன்பான வேண்டுகோள் விடுக்கிறார்
சிவனார்.
“தமிழ்வழியே கல்விதனைக் கொணர வேண்டும்!
தமிழர்களே விழிப்புணர்வு கொள்ள வேண்டும்!
தமிழறியாத் தமிழனிங்க நீங்க வேண்டும்!
தமிழ்ப்புலவர் தலைநிமிர்ந்து வாழ வேண்டும்!
தமிழ்நாடு உலகப்புகழ் கொள்ள வேண்டும்!
தமிழ்ப்பகைவர் இல்லாமற் போக வேண்டும்!
தமிழ்மொழியும் தில்லிமொழி ஆக வேண்டும்!
தமிழ் கலைஞர் கனவுநனவாக வேண்டும்!” (1)
“அப்பாவித் தமிழர்கள் மடிகின் றார்கள்!
அதைக்கேட்கத் தமிழகத்தில் நாதி இல்லை!
ஒப்பாரி இங்கேயும் கேட்கு தையோ?
ஒண்டமிழர் வாழ்ந்தவிதம் என்னா யிற்று?
இப்பாரை ஆள்வதற்கே கலைஞர் வந்தார்!
இன்றமிழர் துயர்துடைக்க எழுந்து நிற்பார்!
தப்பாமல் தில்லியிடம் குரல் எழுப்பித்
தக்கபடி செய்வதுதான் கடமை யாகும்!”
தமிழ்வழிக்
கல்வி கொணர, தமிழ் தழைத்தோங்கி வளரத் தமிழ்ப் பொங்கல் நாளில்
உறுதி எடுக்கவேண்டும் என்று இதழாசிரியர் பின்வருமாறு அழைப்பு விடுக்கிறார்.
“தமிழ்மூலக் கல்விதனைக் கொணர வேண்டும்!
தன்மான இனமாக வாழ வேண்டும்!
‘தமிழ்தானே’ எனச்சொல்வார்
ஒழிய வேண்டும்!
தமிழுக்குப் பகைவரெவர் காண வேண்டும்!
தமிழ்வாழ்வே தம்வாழ்வாய்க் கருத வேண்டும்!
தக்கபடி தொண்டுசெய முனைய வேண்டும்!
தமிழ்ஓங்க வழிவகைகள் செய்ய வேண்டும்!
தமிழ்ப்பொங்கல் நாளுறுதி எடுக்க வேண்டும்!”
‘யாதம் ஊரே! யாவரும் கேளிர்’ என்பது
கணியன் பூங்குன்றனாரின் அடி. ஆனால் இன்றைய தமிழன் பக்கத்து மாநிலத்தில்கூட நிம்மதியான வாழ்வு பெற முடியாத
அவலநிலை இருந்துவருகிறதே என்று வருந்துகிறார் சா.சி.மணி.
“யாதும் ஊரே!
யாவரும் கேளிர்!
என்று சொன்னான் தமிழன்!
மற்றவர்கள்
இதை ஏற்கிறார்களா?
அண்டை மாநிலத்திலும்
நிம்மதியாக வாழ முடியாமல்
தவிக்கிறானே தமிழன்?”
தமிழ்நாட்டில் தடி எடுத்தவர்கள் எல்லாரும் தண்டல்கார்ர்கள்! தான் என்று
நகைச்சுவை த்தும்ப உரைக்கிறார் சா.சி.மணி.
“தமிழ் மொழிக்கெனத் தலைவன் இல்லாநாடு;
தமிழ் நாட்டுக்கெனத் தலைவன் இல்லாநாடு;
தமிழ் இனத்துக்கென தலைவன் இல்லாநாடு;
இங்கே ‘தடி’ எடுத்தவர்கள் எல்லாருமே
‘தண்டல்கார்ர்கள்!” (53)
நாமெல்லாம் இந்தியர்களாக இருந்தும் அப்பாவித் தமிழன் சாகும்போது
வாய்மூடிக் கொண்டிருக்கிறோம் என்று சா.சி.மணி பின்வருமாறு
உள்ளம் குமுறுகிறார்.
“அப்பாவித் தமிழர்கள்
நாள்தோறும்
செத்துக் கொண்டிருக்கிறார்கள்!
கேட்க
நாதியில்லை!
ஆம்!
நாமெல்லாம்
இந்தியர்கள்!” (63)
மரபுக் கவிதை, புதுக்கவிதை, ஹைகூ
கவிதை என்னும் முத்திறக் கவிதைகளையும் ‘தமிழ் மாருதம்’
தாங்கி வருகிறது. மரபுக்கவிதைகளே மிகுதியாக உள்ளன.
கவிஞர்கள் வண்ணை மூர்த்தி, பெரி.
நீல. பழநிவேலன், கூடற்கூத்தன்,
பூவேந்தன், கவிலவாணன் ஆகியோரின் கவிதைகள் இவ்விதழுக்கு
அணிசேர்க்கின்றன ; தண்தமிழுக்குச் சிறப்புச் சேர்க்கும் வகையில்
இக்கவிதைகள் அமைகின்றன. கவிதைகள் அனைத்தும் தமிழின் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்துவருகின்றன. பிற நாட்டினரும் மதிக்கத்தக்க வகையில்
தாய்மொழியில் கவிதை எழுதப்பட வேண்டும்; உலகத்திலேயெ தலைசிறந்த
நாடாகத்தமிழ்நாடு திகழ்வதற்கான வகை செய்ய வேண்டும் என்று சாம்பசிவனார் விழைகின்றார். யாப்பிலக்கணத்துக்கு உட்பட்ட கவிதை
‘மரபுக் கவிதை’ ஆயிற்று. சீர், தளை,
அடி, தொடை என்னும் கட்டுப்பாடுகளை உடையது மரபுக்
கவிதை. பாக்களையடுத்துப்
பாவினங்களும், அவற்றையடுத்துக் கும்மி, சிந்து போன்றனவும் தோன்றின.
இவ்வாறுதான் பாடப்பட வேண்டும் என்னும் வரையறை இருப்பதால் சிதறாத
வடிவமாகப் பாதுகாக்கப்பெற்றுக் காலந்தோறும் இம்முறை பின்பற்றப்பட்டு வருகின்றது.
புதுக்கவிதை வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் தூண்டுகோலாய் அமைந்த்து. சீர், தளை,
அடி, தொடை என்னும் கட்டுப்பாடுகளை உடைத்தது புதுக்கவிதை. எளிய சொற்கள், எளியநடை, எளிதில் பொது மக்களும் புரிந்து கொள்ளக்கூடிய
சந்தம் ஆகிய இவற்றைக் குறிக்கோளாக்க் கொண்டதே புதுக்கவிதை. ஆங்கிலத்தில் ‘Modern
Poetry’ என்று அழைக்கப்படும் புதுக்கவிதையைத் தமிழில் யாப்பற்ற கவிதை, உரைநடைக்
கவிதை, உரைப்பா என்றவாறு விளக்கம்தரப்பட்ட வருகிறது.
சிவனாரின் சைவத் தொண்டில்
குறிப்பிடத்தக்கவை
1.
சைவ சமயக் குடும்பம். ஒன்பதாம் வயதில் ‘சமய தீட்சை’ பெற்றவர்.
2.
தந்தைவழி, தேவாரம், திருவாசகம்,
திருமுருகாற்றுப் படை, திருப்புகழ் முதலானவற்றைச்
சிறு பருவ முதலே கேட்டு, அவற்றில் மனப்பாடம் செய்தவர்.
3.
மதுரையில் பள்ளியில் பயிலும்போதே, ஆடி வீதியில்
நிகழும் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவைத் தவறாமல் கேட்டு,
அத்தகைய பக்தி நூல்களின் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டவர். என்னைப் பற்றி வாரியார், தம் கைப்பட எழுதிய வெண்பாவை இன்றும் பாதுகாப்பாக வைத்துள்ளார்.
4.
மதுரைத் திருவள்ளுவர் கழகத்தின் செயலராகப் பல்லாண்டு பணி புரிந்தமையால், இலக்கியத்
தொடர் சொற்பொழிவன்றிச் சமயம் தொடர்பான சொற் பொழிவுக்கும் ஏற்பாடு செய்தேன். ‘உரைவேந்தர்’ ஔவை சு. துரைசாமி பிள்ளையைக் கொண்டு, ஞாயிறுதோறும் காலை, ‘சிவஞான போத வகுப்பு’; அவ்வாறே, ஞாயிறு தோறும் பேராசிரியர் சுப. அண்ணாமலை
வழியாகத் திருவருட்பா தொடர் சொற்பொழிவு.
மற்றும், திருமுறைச் சொற்பொழிவு போன்றவை!
5.
மதுரைப் பல்கலைக்கழகம் நடத்திய ‘சிவஞான பாடியம்
வேனில் வகுப்பி’ல் கலந்து கொண்டு சான்றிதழ் பெற்றவன்.
6.
தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் சமயச் சொற்பொழிவு!
7.
அவ்வாறே மதுரை வானொலி நிலையத்தில் திருவெம்பாவை – 30 நாள்
பேச்சு; கோவை வானொலி நிலையத்தில்
பழனி பிள்ளைத்தமிழ், முத்துக் குமாரசாமி பிள்ளைத்தமிழ் –
தொடர் சொற்பொழிவு. காலை நிகழ்ச்சியிலும் சான்றோர் சிந்தனை!
8.
மதுரையில் உள்ள பன்னிரு திருமுறை மன்றம், சைவ சித்தாந்த
சபைகளில் சமயச் சொற்பொழிவு.
9.
சமயத் திங்கள் இதழ்களான ‘மெய்கண்டார்’, ‘உழவாரம்’, ‘ஞான சம்பந்தம்’, ‘திருக்கோயில்’,
‘ஸப்தகிரி’ முதலான திங்கள் ஏடுகளில் சமய ஆய்வுக்
கட்டுரைகள்!
10.
கோலாலம்பூரில் நடந்த இரண்டாவது உலக சைவ சித்தாந்த மாநாட்டில், பல்கலைக்கழகச்
சார்பாளராகச் சென்று, ‘சங்க இலக்கியத்தில் சைவ சித்தாந்தம்’
என்ற பொருள் குறித்து ஆய்வுக் கட்டுரை.
11.
அவ்வாறே ஆங்கு நடந்த உலகத் தமிழ் மாநாட்டிலும், அவர்களது
சிறப்பு அழைப்பின் பேரில் சென்று, ‘காப்பியர் வழியில் சேக்கிழார்’
என்ற பொருள் குறித்து ஆய்வுக் கட்டுரை படித்தேன். பின்பு, அவர்களது
ஏற்பாட்டில், 7 தலைநகரச் சொற்பொழிவு.
12.
மலேசியாவில் ஆறு. நாகப்பன் நடத்திவரும், சைவ சிநத்தாந்த வகுப்பில், தொடர்ந்து ஒரு வாரம் சித்தாந்தப்
பாடம்.
13.
கொழும்பு சென்ற போது, ஆங்குள்ள பம்பலப்பட்டி திருக்கோயிலில்,
அரசு ஏற்பாட்டின்படி, ‘மனம் நின்று உருக்கும் மதுர
வாசகம்’ என்ற பொருள் பற்றிச் சொற்பொழிவு. அப்போது ஆங்கு வபந்திருந்த முதியவர்
ஒருவர், ‘நீங்கள் கிருபானந்த வாரியார் மாதிரிப் பேசுகிறீர்கள்!’
என்று கூட்டத்தில் பாராட்டினார்.
14.
சிங்கப்பூரில் பத்தாவது திருமுறை மாநாட்டிற்கு, அவர்களது
அழைப்பின் பேரில் சென்று, திருமூலர் திருமந்திரம் பற்றி உரையாற்றினேன். மற்றும் மன்பே ஏற்பாடு செய்திருந்தபடி
7 திருக்கோயில்களில் சமய விரிவுரையாற்றினேன்.
15.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் கலையன்னை நிறுவிய ‘தியாகராசச்
செட்டியார் அறக்கட்டளைச்’ சொற்பொழிவு 2 நாள், திருமுறை பற்றி உரையாற்றி அம்மையாரின் பாராட்டுப்
பெற்றேன்!
சைவத்திற்கும் சைவ சித்தாந்தத்துறைக்கும் ஆற்றிய பணிகள்
மதுரை காமராசர் பல்கலைக்கழக அஞ்சல்வழிக் கல்வித்துறை, தமிழ் இணைப்பேராசிரியர் பணியினின்றும் 1988 மேத்திங்களில்
ஓய்வு பெற்றதுமே, முனைவர் தமிழண்ணல் உதவியால் தமிழ்த்துறையில்
‘சிறப்புநிலைப் பேராசிரியர்’ (Research
Fellow) பணியிலிருந்தேன்!
அப்போது யான் ஆற்றிய பணிகள் பலவாகும்! குறைந்த
ஊதியமே, அஃதாவது இரண்டாயிர ரூபாய் – ஊதியத்தை
நோக்காது, ‘சைவத்துக்குத் தொண்டு செய்வதே என் கடன்’ எனும் கொள்கை! யான இங்குப் பணியாற்றிய காலம் : 1990 சூலை முதல் 2007 வரை. 17 ஆண்டுகள். குறைந்த ஊதியத்தில் அப்போது நிறைவேற்றிய
ஆய்வுகள் :
1.
சிவஞான முனிவரின் சித்தியார் உரை – சொற்பொருள்
அடைவு.
2.
சிவஞான முனிவர் சித்தியார் உரையிற் காணும் இலக்கணக் குறிப்புக்களும்
விளக்கங்களும்.
3.
சிற்றிலக்கியங்களில் சைவ சித்தாந்தக் குறிப்புக்கள்
4.
சுந்தரர் தேவாரத்தில் சைவ சித்தாந்தம்
5.
திருவாசகத்தில் சைவ சித்தாந்தம்
6.
திருநாவுக்கரசர் தேவாரத்தில் சைவ சிந்தாந்தம்
7.
சிவஞானபோதச் செம்பொருள்
8.
தாயுமானவர் பாடல்களில் சமய நல்லிணக்கச் சிந்தனைகள்
9.
இராமலிங்கர் பாடல்களில் சமய நல்லிணக்கச் சிந்தனைகள்
10.
சைவ சிந்தாந்தக் கலைச்சொல் அகராதி
11.
சைவ சமய இலக்கிய அகராதி 1
12.
சைவ சமய இலக்கிய அகராதி 2
தொல்காப்பியம் – எழுத்து
: சொற்பொருளடைவு; தொல்காப்பியம் – செல் : சொற்பொருளடைவு
எனும் இர ஆய்வுகள் செய்து முடித்தேன்.
இங்குப் பணி நீட்டிப்புக் கிட்டவில்லை! எனினும் என்பால் பெருமதிப்புக் கொண்ட துணைவேந்தர் பெருமைமிகு எம். இலட்சுமணன், பதிவாளர் பெருமைமிகு சிவசங்கரன் ஆகிய இருவரும்,
சைவ சித்தாந்த்த் துறையில் ஆய்வுப்பணி மேற்கொள்ள ஆணை பிறப்பித்தனர்!
அப்போது துறைத் தலைவர் டி.பி. சித்தலிங்கையா!
துறையில் டி.பி.
சித்தலிங்கையா தலைமையில் நால்வர் பணிபுரிந்தனர். முறையாக எம்.ஃபில். வகுப்பும், முனைவர் பட்ட
ஆய்வும் நடந்தன. ஒவ்வொருவராக
ஓய்வு பெற்றனர்; முனைவர் ச. கங்காதரன் மட்டுமே
துறைத்தலைவராக இருந்தார்.
எனது பெருமுயற்சியாலும் துறைத்தலைவரின்
ஆதரவாலும்,
சைவ சித்தாந்த்த்தில் ‘முதுகலை’ தொடங்கப்பட்டது. தொடக்கத்திலேயே ஆறுபேர் சேர்ந்து படித்தனர்; யானும் வகுப்புகள்
நடத்தினேன்!
ஈராண்டு முடிந்தது; மீண்டும்
மாணவர் சேர்க்கைக்குப் பல்கலைக்கழகம் இசைவளிக்கவில்லை! எனவே எம்.ஃபில். வகுப்பு மட்டும் துறைத்தலைவர் நடத்தி வந்தார்;
ஆய்வு மாணவர்க்கு வழிகாட்டுநராகவும் இருந்தார்!
இதற்கிடையில் துறையை மூடிவிடும்
நிலை வந்தது! இப்படி ஒரு துறை உண்டு என்பதுகூட, மதுரையில்
உள்ள சைவர்களுக்கே தெரியாது! என் செய்வதெனச் சிந்தித்தேன்.
தெ.பொ.மீ. முயற்சியால் மலேசியாவில், இத்துறைக்
கென மூன்று இலட்ச ரூபாய் சேர்க்க முடிவாயிற்று.
மு. வரதராசனார்
துணைவேந்தராயிருக்கும் போது மலேசியா சென்றவர், அத்தொகையைப் பெற்றுக்
கொண்டு துறையைத் தொடங்கினார்; முதன்முதல் சைவ சித்தாந்த முதியவர்
க. வச்சிரவேல் முதலியாரை வரவழைத்துப் பணியில் அமர்த்தினார்!
பல்கலைக்கழக அஞ்சல்வலிக் கல்வி முதுகலை மாணவர்க்குரிய விருப்ப்ப் பாடங்களாகச்
சைவ சித்தாந்தமும், ஒப்பியல் இலக்கியமும் இருந்தன. நூற்றுக்கணக்கானோர், சைவ சித்தாந்தப் பாடம் எடுத்து வெற்றி பெற்றனர். க. வச்சிரவேறு
முதலியாரும், முனைவர் ச. கங்காதரனும் வகுப்புகள்
நடத்தினர்.
‘இத்தகைய பயனுள்ள
துறையை மூடிவிட்டால் என் செய்வது?’ என்று வருந்தினேன்;
மலேசியா அருள்நெறிக் கூட்டத்திற்குத் தனிப்பட்ட முறையில் நிலைமை குறித்து
எழுதினேன். அவர்களும்
காலங்கடத்தாமல் செயற்குழுவைக் கூட்டி, ‘மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில்
சைவ சித்தாந்த்த்துறை தொடர்ந்து செயல்பட வேண்டும்’ என்று தீர்மானம்
நிறைவேற்றித் துணைவேந்தருக்குப் பதிவஞ்சலில் அனுப்பி எனக்கும் அதனைத் தெரிவித்தனர்!
எனது பெருமுயற்சியாலும் இறைவன்
திருவருளாலும் சைவ சித்தாந்த்த்துறை செயல்பட்டு வருகின்றது. துணைவேந்தர் பெருமைமிகு கற்பக குமாரவேல்,
துறைக்கென மூன்று இணைப்பேராசிரியர்களை நியமித்தள்ளார் என்பது வரவேற்கத்தக்கதொன்றாகும்.
…… நூல்கள் எழுதியபின்,
பதிவாளர் பண்பாளர் – முனைவர் வெ. அழகப்பன், என்பால் கொண்ட அன்பினால், மீண்டும் தமிழ்த்துறையில் 24.10.2005 முதல் பணிபுதிய
ஆவன செய்தார். முன்னைவர்
இரா. மோகன் ஆட்சிக்குழு உறுப்பினர்; நண்பர்
முனைவர் மு. மணிவேல் துறைத்தலைவர். எனவே மகிழ்வுடன் பொறுப்பை ஏற்றேன்;
இவர்கள் விருப்பப்படி தமிழ் முதுகலை மாணவர்க்குத் தொல்காப்பியப் பாடம்
நடத்தினேன். மதிப்புக்குரிய
முனைவர் மருதமுத்து துணைவேந்தராக இருந்த போது, இவ்விரு நண்பர்களின்
வேண்டுதலுக்கிணங்க, அத்துணை ஆண்டாக இரண்டாயிரம் மட்டுமே ஊதியம்
பெற்றுவந்த எனக்கு, ஐயாயிரமாக உயர்த்திக் கொடுத்தார்.
தமிழ்த்துறைக்கு வந்த பிறகும்
சைவ இலக்கியங்களில் தமிழர் பண்பாடு தொகுதி 1, 2 மற்றும் தொல்காப்பியம் பொருளதிகாரம்
அனைத்திற்கும் சொற்பொருள் அடைவு தயாரித்தேன்!
எனக்குக் கொடுக்கப்பட்ட தமிழ்ப்
பணியைச் செம்மையாய் நிறைவேற்றியுள்ளேன் என்ற மனமகிழ்வு! எனினும்
போதிய உடல்நலமில்லாமையால், பணியிலிருந்து ஓய்வு பெற்றேன்!
என் துணைவி மனோன்மணி, 1986ஆம்
ஆண்டு (26-07-1986) மாரடைப்பால் இயற்கை எய்தினள்! அதனாலேயே யான் மிகமிக்க் குறைந்த ஊதியத்தில் பணிபுதிய நேர்ந்த்து. எனினும் என் கடமையை முழுமையாகச் செய்து
பலரது பாராட்டும் பெற்றேன் என்ற மன அமைதி எனக்கு உண்டு!
இவைதவிர, என் சொந்தச்
செலவில், சமய நூல்கள் சிலவும் எழுதியுள்ளேன். யாவரும் படித்துப் பயன்பெறும் வகையில்
இலவச வெளியீடுகளும் வெளியிட்டுள்ளேன் (காண்க: நூற்பட்டியல்).
எனக்கு விவரம் தெரிந்த நாள்
முதலே,
காலை நீராடிய பின், வழிபாடு செய்வது வழக்கம்.
மதுரை மீனாட்சி திருக்கோயிலினுள், யான் பல்லாண்டுகள்
தொண்டு செய்த ‘மதுரைத் திருவள்ளுவர் கழகம்’ அமைந்திருப்பதால், இயல்பாகவே ‘இறைவன்
எண்ணம்’ வந்துவிடும்.
இந்த்த் திருமுறைகள்தாம்
இன்றும் எனக்குப் பேருதவியாக – குறிப்பாகச் சொல்வதனால் – யாருமில்லாமல் தனித்திருக்கும் எனக்கு உற்றுழி உதவி வருவன எனில் மிகையில்லை!
இத்தகு காரணங்களால்தான், மதுரை காமராசர்
பல்கலைக்கழகச் சைவ சித்தாந்த்த்துறையில் மிக்க ஈடுபாட்டுடன், ஓய்வு பெற்ற பின்னரும் பலகாலம் பணிபுதிய முடிந்த்து!
1978ஆம் ஆண்டில்,
நெல்லையில், அஞ்சல்வழிக் கல்வியில் தமிழ் முதுகலை
பயிலும் மாணவர்க்குத் ‘தொல்காப்பியம் செய்யுளியல்’ பாடம் நடத்திக் கொண்டிருந்தபோதே மாணவர் ஒருவர், உடனே
பாடியளித்த நேரிசை வெண்பா:
“யாப்பின் இலக்கணமே
யாவர்க்கும் நன்றாகச்
சேர்ப்பிக்கும் சாம்ப சிவனார்க்கு – மூப்பு
மிகவுடைய யாமே மிகவணங்கி நிற்போம்
தகவுடனே என்றுமெமைத் தாங்கு!”
- செல்லை மாணாக்கர் சார்பில்
க.ஆ. இராமசுவாமி (சேரன்மாதேவி)
(இவர், வங்கி ஒன்றில் பணிபுரிபவர்
என்பதும் குறிப்பிடத்தக்கது!)
28. வானொலிப் பொழிவுகள் :
23.12.1965 முதல் : திருச்சிராப்பள்ளி,
சென்னை, மதுரை, திருநெல்வேலி,
புதுச்சேரி, திருவனந்தபுரம், கோயம்புத்தூர் முதலாயின.
மதுரை வானொலி : மார்கழி மாதம் முழுவதும் திருவெம்பாவை
விளக்கம் (2 ஆண்டுகள்)
கோவை வானொலி : பழநி முருகன்
பிள்ளைத்தமிழ், திருவேரகம் சுவாமிநாதன் பிள்ளைத்தமிழ் விரிவுரைகள்.
திருச்சி வானொலி : பேரா. க.
வெள்ளைவாரணனாருடன் நாவலர் பாரதியார் பற்றிய பேட்டி.
மதுரை வானொலி : பெரும்புலவர்
ச. தண்டபாணி தேசிகருடன் பேட்டி – 7 மணி
நேரம். (ஈயக்குநர் திரு. விசய திருவேங்கடம்
ஏற்பாடு! இன்றும் பாதுகாப்பாக உள்ளது!)
சென்னைத் தொலைக்காட்சி : 3 முறை
(டாக்டர் ல்லிதா காமேசுவரனுடன் நாவலர் பாரதியார் குறித்துப் பேட்டி!)
கோலாலம்பூர், சிங்கப்பூர்,
கொழும்பு : வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் சொற்பொழிவுகள்!
29. சொற்பொழிவு :
1950 முதல் பல்வேறு ஊர்களில் – (பெங்களுர் உட்பட)
30. பட்டிமன்றம் :
முதன் முதல் மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் யான் செயலராயிருக்கும்
போது அறிஞர்களின் பட்டிமன்றம். தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் பட்டிமன்ற நடுவராக – பேச்சாளராக!
(தமிழ் மாருதம் இதழில் விரிவாக உள்ளது!)
32. யான், அக்காலத்தில்,
‘மதுரைச் சிவம்’ என்ற புனைபெயரில் பல்வேறு
இதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
நினைவிலிருந்து சில இதழ்கள் :
தமிழர் நாடு, தமிழ் நாடு, நவ
இந்தியா, வீரகேசரி (கொழும்பு), செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, குறள் மலர், மதுரை மலர், திங்கள்,
நித்திலக் குவியல், தமிழன் குரல் (அட்டைப் படத்துடன்), தமிழ் நேசன் (சிங்கப்பூர்), குறிஞ்சி, தமிழ்த்
தென்றல், தினமணி, தினமலர், கலைக்கதில், தினத்தந்தி, திருக்கயிலை,
இந்திய முரசு, தமிழக அரசு, சப்தகிரி (திருப்பதி), திருக்கோயில்,
சத்தியவர்த்தமானி, சைவ உலகு (இலண்டன்), சைவ நீதி (கனடா),
உழவாரம்.
32. திரு. ஐராவதம் மகாதேவன்
ஆசிரியராயிருந்த போது ‘தினமணி’யில்
‘நூல் மதிப்புரை’ – ஏறத்தாழ 40 நூல்கட்கு மேல் எழுதியுள்ளேன்!
33. மதுரைக் காமராசர் பல்கலைக்கழக ஆய்வு ஆசிரியர்
மன்றம் :
மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற
விழைவோர்க்கென, மதுரையில், ‘ஆய்வு ஆசிரியர் மன்றம்’
ஒன்றை உருவாக்கினேன்.
பேரா. முத்து சண்முகனார் – தலைவர். தமிழ்க்குடிமகனார்
உள்ளிட்டோர் பொறுப்பினர். யானும் பேரா. சீனி. சௌமிய நாராயணனும்
செயல்கள். திங்கள்தோறும்
கூட்டம்; ஆய்வாளர், ஆய்வுக் கட்டுரை படிப்பார். வேண்டிய திருத்தங்கள் கூறப்படும். தமிழக அரசுச் செய்தித்துறை அலுவலராக
இருந்த திரு. ஜெயச்சந்திரன் மாற்றலாகிப் போனது வரை அந்தக் கட்டிடத்தில்
நடந்த்து!
34. தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட களஞ்சியம்,
சாகித்திய அகாதமி வெளியிட்ட புதிய அகராதி – இவற்றிற்கு
அவர்கள் அளித்த தலைப்பில் செய்திகள் அளித்துள்ளேன்!
மரபிலக்கியங்களில் தேர்ந்த பயிற்சியும், ஆழமான புலமையும்
கொண்ட ச. சாம்பசிவனார், நூற்றுக்கும் மேற்பட்ட
ஆய்வுக் கட்டுரைகளையும், எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும் தமிழ்கூறும்
நல்லுலகிற்கு நல்கியவர்.
முனைவர் ச. சாம்பசிவனார், ‘நிலவே
நீ சாட்சி’ எனும் சிறுகதைத் தொகுப்பை 1997ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார்.
அறுபதுகளில் இக்கதைகள் ‘தமிழ்நாடு’,
‘மதுரை மலர்’, ‘கொழும்ப வீரகேசரி’ முதலிய இதழ்களில் வெளிவந்துள்ளன என்பது அவர் எழுதியுள்ள முன்னுரையிலிருந்து
தெரிகிறது (நிலவே நீ சாட்சி, முன்னுரை). பத்துச் சிறுகதைகளை மட்டுமே எழுதியிருப்பினும்,
ச. காம்பசிவனாரின் சிறுகதைத் திறன் அவருடைய தொகுப்பில்
நன்கு வெளிப்பட்டுள்ளது. ச. சாம்பசிவனாரின் எழுத்தாற்றலையும், சிறுகதை எழுதும் நுட்பத்தையும் விளக்குகிறது.